Saturday, April 11, 2009

இல்லாத ஊருக்கு, வழி சொன்ன வித்தைக்காரி !!!

1.

ஆற்றினில் மிதக்கும் -
தாமரை இலை நாம் ,
அந்தி சாயும் பொழுது -
அவரவர் நனைந்த ஈரம் பார்த்து ,
ஒவ்வொருவர் காதலை எடை போடுவோம் ..!

2.

இல்லாத ஊருக்கு -
வழிகேட்ட வழிப்போக்கன் நான் ,
அதற்கும் வழி சொன்ன -
வித்தைக்காரி நீ ..!

3.

நவகிரகம் சுற்றும் எல்லோரும் -
நீ சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்து ,
பத்தாம் கிரகம் இருக்கிறதென்று -
ஊர் முழுக்க உளருகிறார்கள் !!!

4.

அக்கம் பக்கம் பார்க்கையில் -
என் ஊடல் உணர்ந்து -
தள்ளி தள்ளி போவாய் ...
உன்னை மட்டும் பார்க்கும்போது -
என் உள்ளம் உணர்ந்து ,
அருகில் அருகில் வருவாய் ..!

5.

உனக்கும் எனக்கும் சண்டைகள் வந்தால் ,
என் தோழர்களுக்கும் ,
உன் தோழிகளுக்கும் ;
சண்டை மூட்டிவிடும் -
கலகக்காரி நீ ..!

6.

ஆகாயம் பார்த்து பார்த்து -
அடிக்கழுத்து வலிக்கிறதென்றாய் ,
அப்படி என்னதான் பார்த்தாயென்று -
அந்த கண்கள் பார்த்து பார்த்து -
அதனுள் ஆகாயம் உள்ளதென்றேன் ..!

7.

நீ வளர்க்கும் மீண் குஞ்சுகளோ ?
அதனால்தான் கோவிலில்கூட,
லஜ்ஜை தெரியாமல் -
இச்சிக் கொள்கின்றனவோ ?

8.

நீ நட்டுச்சென்ற செடிகள் எல்லாம் -
மரமாகவே மாட்டேன் என்கிறது ...
பிறகுதான் தெரிந்தது ,
குட்டிச்செடிகளுக்குதான் -
அதிக நேரம் செலவிடுகிறாயாம் ...

9.

உன் உள்ளம் நியாபகம் வந்தால் ,
கண்கள் மூடி, இதயம் தொட்டு -
சினுங்கள் கேட்கின்றேன் ,
உன் ஊடல் நியாபகம் வந்தால் ,
கண்கள் திறந்து, கைகள் விரித்து -
அனைப்பினை உணர்கின்றேன் ..!

10.

ஆசைகள் துறக்க புத்தன் வந்தான்,
அகிம்சை வளர்க்க காந்தி வந்தான்;
ஆனால் உலகம் ருசிக்காது ...
ஆசை வேண்டும், இம்சை வேண்டும் -
ஆதலால் நாம் வந்தோம் ...

7 comments:

Jaya said...

romba romba sooperrr...

Srividhya said...

Prabhu -Good.

Etho feel panni ezhuthara madhiriye theriyuthu....

Paiyan onnum sari illanau nenakaran:)

Revathi said...

Too good.. Romba unarnthu ezhuthiyirukeenga pola :-)
Hmmm...Enjoy..Keep it..

Ramya said...

Super paps.. romba nalla irukku… ana girls aa eppadi kalakakari nu solla kudathu.. I like Eighth one.. super.. good job..

Senthil said...

Good one Prabhu...

Liked the 6th and 8th especially.. if the 4th line in 6th one also starts with ‘a’ it would be too good..

Keep rocking :-)

Prabhu Chinnappan said...

Tx guys.
@Ramya: That kalakakaari word is just for poetic beauty :-)
@Senthil: 6th poem has been modified.

Shankar said...

wow...so nice man. it melts the heart.