Friday, May 29, 2009

தவறே செய்தினும் , தங்கம் நீ ..!

நாளை என் -
வாழ்க்கை பயணம் மாறினாலும்,
நம் நட்பின் பயனம் -
என்றும் தொடரும் ...



ஒரு துளி ஆயினும் -
ஓராயிரம் என்றாலும் ,
அதன்பேர் மழைதான் ...
தேவதை ஆயினும் -
பிசாசு என்றாலும் ,
எனக்கு நீ தோழிதான் ...



தவறே செய்தினும் -
தங்கமென்றே சொல்லத் தோண்றுகிறது ,
தொலைவில் இருந்தாலும் -
தோள் சாய்ந்திருப்பதுபோல் உணர்கிறேன்..!



ஆர்ப்பாட்ட பேச்சுக்கள் வேண்டாம் -,
ஆரவார வரவேற்ப்பு வேண்டாம் ;
அழகிய புன்னகைகூட வேண்டாம் ,
தோழியென்ற நினைவே போதும் ...



இப்படியே கைகோர்த்து வா ,
உலகத்து எல்லை தாண்டியும் -
நடந்து கொண்டிருப்பேன் ..!



அருகில் இருக்கும் -
அழகிய பெண்னை பார்த்து வழிகையில் ,
உன் கைக்குட்டை கொடுத்து உதவிடும் -
உன்னத தோழி நீ ..!



நியாயிரு விடுமுறை நாள்,
ஆதலால் குளிப்பதில்லை ,
அரைகுறை ஆடையில் இருப்பினும் -
நட்பெனும் உடை மேலிருப்பதால் ,
ஏடாகூடமாய் பார்ப்பதில்லை ...



கோவில் பிரசாதம் கூட -
சுத்தம் பார்த்து சுவைப்பவன்,
உன் எச்சில் தட்டில் -
உணவு எடுத்து சுவைக்கையில் ,
கொண்ட கொள்கை அனைத்தும் -
கொஞ்ச நேரம் காணாமல் போய்விடும் !!!



என்ன சொல்லிவிட்டேன் -
இப்படி கோபப்படுவதற்க்கு என்றாய் ?
சொல்லிய சொல் முக்கியமல்ல ,
சொன்னது நீ என்பதுதான் ..!



எப்படி நீ திட்டினாலும் -
உறைக்கவே மாட்டேன் என்கிறது ...
எது சொன்னாலும் -
கொஞ்சி குழைந்து சொல்வதால் ..!



அடடா அழகிய கவிதையென்று ,
ஆயிரம் பேர் வாழ்த்தினாலும் ,
"ம் பரவாயில்லை டா" எனும் -
உன் வார்த்தைகளில்தான் -
அந்த கவிதையே முழுமை அடைகிறது ..!



வானம் பார்க்க -
எனக்கு மேலே பார்க்க வேண்டும் ,
பூமிதனை பார்க்க -
தாழ்ந்து பார்த்திடல் வேண்டும்,
உனை பார்க்கும்போதுதான் -
எனக்கு நிகராய் அருகில் பார்க்கிறேன் ..!



வயலின் வால்த்தனம் ,
தபேலா திட்டுக்கள் ,
பியானோ பேச்சுக்கள் ,
புல்லாங்குழல் பார்வைகள்,
அடடா சிம்பொனி உருவாக-
நம் சந்திதிப்பு ஒன்றே போதும் ..!

Wednesday, May 13, 2009

Wah Starbucks ..!


<-- This is for all those Coffee Lovers... Especially to the Starbucks fans :-) -->

Junkies of a brew sublime,
Any place and any time.
Stir it up with big smile,
It’s kept me up all this while.

Gimme my mug of ol’ sunshine,
Rest of the day will just be fine.
You know just how it should be,
You know it’s not just the Coffee.


Wah Starbucks ..!

Kya Aap Mere Saath Starbucks chalenge? ..:-) :-)

Tuesday, May 12, 2009

பட்டுடுத்தும் பாவை ..!

நீ புடவை கட்டும் அழகுபார்த்து ,
கொடுத்துவைத்த புடவை என்றார்கள் ...
உனை கட்டிக்கொள்பவனும் -
கொடுத்துவைத்தவன்தான் !!!


புடவையில் எப்படி இருக்கிறாயென -
அம்மனிடம் கேட்கிறேன் ,
உனைப்பார்த்து -
அதிகம் பொறாமை கொள்பவள் ,
அவள்தான் !!!


புடவையில் இருந்த -
வெள்ளி ஜரிகை அனைத்தும் ,
தங்கமாய் மாறிப்போனது ...
அணிந்துகொண்ட மேனி அப்படி !!!


புடவையழகை திருட்டுப் பார்வை -
பார்த்ததை கண்டு ,
அடிக்க வந்தாய் ...
ஆனானப்பட்ட விசுவாமித்திரனே -
அரை நாழிகை சலனம் கொள்கையில் ,
எம்மாத்திரம் நான் !!!


பட்டுடுத்தும் தோரணை பார்த்து -
பார்கடல் வசிக்கும் பரந்தாமனும் ,
புது அவதாரம் எடுத்து -
பூமி இறங்குவான் ..!


புடவை கட்டியது போதும் ,
எப்பொழுது -
எனை கட்டிக்கொள்வாய் ..!


நீ புடவை கட்டும் அழகு பார்த்து ,
எனக்கும் புடவை கட்ட -
ஆசை வருகிறதென்றேன் ...
எனை கட்டிக்கொள்ள மாட்டாயாவென புலம்பினாய் ???
இப்பொழுது நீ இல்லாத புடவை ,
இரவு புடவை இல்லாத உனை ??!!!

Thursday, May 07, 2009

தாய்மடிபோல், தோள் சாய்ந்துகொள்வாய் ..!

சுமந்து பெற்றால்தான் தாயென்றால்,
அவளைப்போல் அதிகம் அன்பு -
உன்மேல் செலுத்தும் என்னை ,
என்னவென்று சொல்வாய் ..!


தூக்கம் வந்தால் -
தாய்மடி என்றாய் ...
அதுபோல்தான் நானும் -
என் தோள் சாய்ந்துகொள்வாய் ..!


தலைகோதி ,
தாலாட்டு பாடுவாளென்றாய் ...
நெற்றி முத்தத்தில் -
நண்பனின் நேசம் அறிந்துகொள்வாய் ..!


முதல் வார்த்தை , முதல் உலகம் ,
சொல்லித் தந்தவள் அவளென்றாய் ...
இனிவரும் உலகனைத்தும் -
கடந்து செல்ல ,
வழித்துணைக்கு நானென்பேன் ..!



அந்த வானம், பூமி -
அத்தனையும் தந்து கேட்டாலும் ,
தாயைவிட சிறந்ததில்லை என்றாய் ...
அந்த தாயின் வீட்டினில் -
எனக்கும் கொஞ்சம் இடம் கொடு ..!


அந்த பொண்ணு அழகாய் இருக்கிறாளென்று -
உன்னிடம் காட்டுகையில் ,
அவசரப்படேல் நண்பாவென்று மிறட்டி ,
அவ்வப்போது என் அம்மாவாகவும் -
அவதாரமெடுக்கும் அதிசயம் நீ ..!



கொடுக்க கொடுக்க -
சேரும் சொத்து ,
அன்னை அன்பு மட்டும்தான் ...
பழக பழக ,
மேலும் உயரும் ,
நட்பின் புனிதம் மட்டும்தான் ..!



என் விழியில் நீர்த்துளி பார்த்துவிட்டால் -
மொத்த உலகையும் பொசுக்கிவிடும் ,
மூர்க்கமான காளி வேடம் கொள்வாள் ...
பாசம் வைக்கும் எவர்க்கும் -
அன்பனைத்தும் அள்ளிக்கொடுக்கும் ,
கருனை தெய்வமும் ஆவாள் என்றாய்...
அந்த தெய்வத்திற்கு பக்தனாகும் பாக்கியம் -
என்னில் மட்டும் உள்ளதென்பேன் ..!